அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பல நாடுகளின் மீது அதிகப்படியான வரிகளையும் தடைகளையும் விதித்து வருவதன் ஒரு பகுதியாக தற்போது பாகிஸ்தான், பூடான் உள்ளிட்ட 41 நாடுகளைச் சேர்ந்த குடி மக்களுக்கு கடுமையான பயணத் தடைகள் விதிக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் புதிய தடை குறித்த குறிப்பாணையில் மொத்தம் 41 நாடுகள் மூன்று தனித்தனி குழுக்களுக்காக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் முதல் குழுவில் ஆப்கானிஸ்தான், ஈரான், சிரியா, கியூபா, வடகொரியா, லிபியா, சோமாலியா, சூடான், வெனிசுலா, ஏமன் ஆகிய 10 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்நாடுகளின் குடிமக்கள் விசா இடைநீக்கத்தை (visa suspension) முழுமையாக எதிர்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது குழுவில் எரித்ரியா, ஹைதி, லாவோஸ். மியான்மர், தெற்கு சூடான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்நாடுகளின் குடிமக்கள் முழுமையான விசா இடைநிறுத்தத்தை எதிர்கொள்ள மாட்டார்கள்.
ஆனால் சுற்றுலா, மாணவர் விசா பிற புலம்பெயர்வு விசாக்களை இடைநிறுத்தப்படும் என கூறப்படுகின்றது. மூன்றாவது குழுவில் பாகிஸ்தான், பூடான் உள்ளிட்ட 26 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகள் 60 நாட்களுக்குள் குறைபாடுகளை சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இல்லை என்றால் அந்நாடு களின் குடிமக்களுக்கு விசா வழங்குவதும் நிறுத்தி வைக்கப்படும். அதற்கான நடைமுறைகளையும் பரிசீலித்து வருவதாக அந்தக் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தப் பட்டியல் இறுதிப்படுத்தப்பட்ட பட்டியல் அல்ல எனவும் இதில் எந்த மாற்றங்கள் வேண்டுமானா லும் நடக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த புதிய தடைகளுக்கு அமெரிக்க வெளி யுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபி அல்லது வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். இந்த தடைகள் குடியேற்ற கட்டுப் பாடுகளின் ஒரு பகுதி என கூறப்படுகின்றது. இந்த புதிய தடைகளுக்கு முன் தேசிய பாது காப்பு என்ற பெயரில் அமெரிக்காவுக்கு வரு கின்ற எந்த ஒரு வெளிநாட்டினரையும் தீவிரமான பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஜன 20 அன்று நிர்வாக உத்தரவினை டிரம்ப் பிறப்பித்திருந்தார்.டிரம்ப் முதல் முறை ஜனாதிபதியாக இருந்த போது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் 7 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு தடை விதித்திருந்தார்.