சென்னை, ஜூன் 1
எனக்கு துணை முதல்வர் ஆசை காட்டி அதிமுக கூட்டணிக்கு ஆதவ் அர்ஜுனா அழைத்ததாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.
தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதில், “2024 மக்களவைத் தேர்தலில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை 10 பேரை வைத்துக்கொண்டு, 20 சதவீத வாக்கு வாங்கியிருக்கிறார். ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணி வைக்க முன்வரவில்லை.” என்று ஆனந்திடம், ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார், இது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு சீமான் கூறியதாவது:
ஆதவ் அர்ஜுனா புரளி பேசுவதற்கெல்லாம் நான் கருத்துச் சொல்ல முடியுமா? இதே ஆதவ் அர்ஜுனாதான் என்னை அதிமுக கூட்டணிக்கு வருமாறும், துணை முதல்வர் ஆக்குவதாகவும் கூறினார். அதற்கெல்லாம் என்ன செய்யமுடியும்?
இவ்வாறு சீமான் கூறினார்.