ஆஸ்திரேலியாவில் முதல்தர கிரிக் கெட் போட்டிக ளில் சிறப்பாக விளையாடி வந்த வில் புக்கோவ்ஸ்கி (27) ஆஸ்திரேலிய அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்தி ரமாக கருதப்பட்டார். டிராவிட் போல நிதானமான ஆட் டத்தை வெளிப்படுத்தி விக்டோ ரியா அணிக்காக 2 இரட்டை சதங்கள் அடித்ததால், 2021 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் புக்கோவ்ஸ்கி தேர்வு செய்யப் பட்டார். ஆனால் இந்தியா-ஆஸ்தி ரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தின்போது, இந்திய வீரர் கார்த்திக் தியாகி வீசிய பந்து வில் புக்கோவ்ஸ்கி தலையில் பயங்கரமாக தாக்கி யது. இதில் பலத்த காயம டைந்த அவர் மைதானத்தில் அப்படியே நிலைகுலைந்தார். 2 ஆண்டு தீவிர சிகிச்சை மேற்கொண்ட பின்பு கடந்த ஆண்டு இயல்பான நிலைக்கு திரும்பிய நிலையில், மீண்டும் கிரிக்கெட் விளையாட தொ டங்கினார். ஆனால் எதிர்பாரா விதமாக 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஷெபீல்ட் ஷீல்ட் தொடரில் மெரிடித் வீசிய பவுன்சர் பந்து வில் புக் கோவ்ஸ்கியின் தலையில் தாக்கியது. இதில் அவர் மீண்டும் பலத்த காயம டைந்தார். மூளை அதிர்ச்சி ஏற் பட்டதால் அவரால் சாதாரண பயிற்சியை கூட தொடங்க முடியவில்லை. இதனால் மருத்துவர்களின் ஆலோச னைப்படி வில் புக்கோவ்ஸ்கி நிரந்தரமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தொடர்ச்சியான பவுன்சர் தாக்குதலால் வெறும் 27 வயதிலேயே வில் புக்கோவ் ஸ்கி நிரந்தரமாக ஓய்வு அறி வித்து இருப்பது கிரிக்கெட் உலகில் கடும் அதிர்ச்சி அலை யை ஏற்படுத்தியுள்ளது.