உற்றமும் சுற்றமும்
உடன் இருப்பாரென
பற்றிப் படிந்து
பலகாலம் பேண
அற்ற குளத்து
அறுநீர்ப் பறவையென
இற்ற கயிராய்
அறுந்து போகுதே!
வளர்பிறை நிலவாய்
வாழ்ந்திட வேண்டின்
தேய்பிறை நிலவாய்த்
தினந்தினம் சுருங்க
புதுப்புது பொருளைப்
புரிய வேணுமோர்
புத்தம் புதிய
அகராதி அறிவீர்
சே.முத்துவிநாயகம்
திருநெல்வேலி