tamilnadu epaper

தூரம் அதிகமில்லை

தூரம் அதிகமில்லை


இருக்கும் போதே

தெரிவதில்லை

அவர்கள்

அருமையும்

அதன்

அருமையும்


இப்போதெல்லாம்

தெரிகிறது

எல்லோரின்

அருமையும்

எல்லாவற்றின்

அருமையும்


இழந்தோரை

நினைத்து

இருப்போரையும்

இழந்து 

விடலாகாது


இழந்தோரிடம்

காட்டாத

அன்பை

கொள்ளாத

அக்கறையை

பேசாத

பேச்சை

இருப்போரிடம்

இல்லாது

பார்த்துக்

கொள்கிறேன்


தவறு

நடந்தது

தப்பு

நடக்காது

பார்த்துக்

கொள்கிறேன்


ஆயிரம்

அறிவுரை

சொல்லாததை

ஒரு

அனுபவம்

சொல்லுகிறது


இருப்போரை

பார்த்துக்

கொள்ளலாம்

இழந்தோரை...


அவர்களிடமும்

அன்பு 

காட்ட

அக்கரை

கொள்ள

பேசாததை

பேச

விருப்பம்தான்

ஆதங்கம்தான்

என்

செய்வது


அவர்களையும்

சந்திக்க

ஆசைதான்

வெகு தூரமில்லை

வந்தடைவேன்

என் வேளை

வந்ததும்...


-ஆறுமுகம் நாகப்பன்