tamilnadu epaper

கதிரவன்

கதிரவன்


காருலகின் கடவுளாம் கண்கண்ட தெய்வமாம்


பேருலகை வாழவைக்கும் பெருமைமிகு ஆற்றலாம்


கண்ணால் கண்டு காலைகரம் கூப்பினால்

கண்ணை நன்றாய் காக்குமே


இச்சையோடு பச்சையத்தில் இதமாய் 

ஒளிபுகுத்தவே

பச்சைக்காயும் பல்தானியமும் பலமாய்

விளைந்தே கொட்டுமே


பகலெல்லாம் பயணித்து 

இரவுக்கு ஏங்குமே

முகமதி காணவே முனைப்பும் மிககாட்டுமே


ஒளியை உமிழ்ந்து உணர்த்த மதியும்

களி கூர்ந்தே ஒளிர்ந் திடுமே


மதியும் இணைய மறுத்தே ஒளியை

மதியாய் உள்வாங்க

விதியென கலங்குமே


விழித்த இரவு வேதனை 

யால் 

பழித்து மதியை பலியாக்க இயலாதே


சிவந்த முகமாய் சினமோடு காலையில்

சிரம் தாழ வைக்கும் கதிரவனே



-சிவ.சே. முத்துவிநாயகம்

திருநெல்வேலி