மார்ச் 10 அன்று எக்ஸ் சமூகவலைதளம் மூன்று முறை முடங்கியது. இந்த முடக்கத்தின் பின்னணியில் உக்ரைன் நாட்டின் சதி இருக்கலாம் என எலான் மஸ்க் சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும் எக்ஸ் தளத்தின் மீது தினந்தோறும் சைபர் தாக்குதல் நடைபெறும். ஆனால் இது மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கணினியின் ஐபி முகவரி உக்ரைன் நாட்டில் இருந்தே அது நிகழ்த்தப்பட்டுள்ளதாகக் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.