tamilnadu epaper

கடலூர் புத்தகத் திருவிழா: கலைநிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கிய கலெக்டருக்கு கிராமிய கலைஞர்கள் நன்றி

கடலூர் புத்தகத் திருவிழா: கலைநிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கிய கலெக்டருக்கு கிராமிய கலைஞர்கள் நன்றி

கடலூர், ஏப்.9


-கடலூர் 3 வது புத்தகத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் வழங்கியதற்காக கிராமிய கலைஞர்கள் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.


இதுகுறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது,


கடலூர் மாவட்டத்தில் 3ஆவது புத்தகத் திருவிழா மாணவர்கள் நூலகங்களுக்கு சென்று புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தினை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் 22.3.2025 முதல் 31.3.2025 வரை நடைபெற்றது. இப்புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் 3 கலைக்குழுக்கள் வீதம் 30 கலைக்குழுவினரைச் சேர்ந்த 650 கிராமியக் கலைஞர்கள் பங்கேற்றனர்.


தமிழர்களின் பாரம்பரிய தொன்மை யான கலைகளை வெளிகொணரும் வகையில் பரதம், பல்சுவை நடனம், தேவலோக ஆட்டம், மல்லர் கம்பம், கழிசிலம்பம், கரகாட்டம், மயிலாட்டம், பம்பையாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம், நையாண்டி மேளம், தோள் தப்பட்டை உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு கலைஞர்களை பாராட்டினர்.


கிராமியக் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பளிக்கவும், அவர்களின் திறமைகளை வெளிகொணரவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் இப்புத்தகத்திருவிழாவில் வாய்ப்பளித்து சான்றிதழ்கள் வழங்கிய தற்காகவும், மாவட்ட கலெக்டரிடம் நன்றியினை தெரித்ததோடு, இதுபோன்ற அரசு நிகழ்ச்சிகளில் மீண்டும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்திட வாய்ப்பளிக்குமாறு கோரிக்கையினையும் வைத்தனர் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.