tamilnadu epaper

கடலூர் மாவட்ட காவல்துறையில் ஓய்வுபெறும் ஆய்வாளர்களை எஸ்பி ஜெயக்குமார் IPS சால்வை அணிவித்து கௌரவித்தார்

கடலூர் மாவட்ட காவல்துறையில் ஓய்வுபெறும் ஆய்வாளர்களை எஸ்பி ஜெயக்குமார் IPS சால்வை அணிவித்து கௌரவித்தார்


கடலூர் மாவட்டம் காவல்துறையில் சிறப்புடன் பணியாற்றி இன்று 31.05.2025 தேதி பணிஓய்வு பெறும் ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கடலூர் மாவட்ட அலுவலகத்தில் சிறப்பாக கௌரவிக்கப்பட்டனர். 


அவர்கள் ஆய்வாளர் திரு. R. தணிகாச்சலம், உதவி ஆய்வாளர்கள் திரு. P .K. முருகன், திரு. T. வெங்கடேசன், திரு. C. கிருஷ்ணமூர்த்தி, திரு.G. மணிவண்ணன், திரு. B.சாமிநாதன் மற்றும் திரு. P. ஜான்பாஸ்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு. A. ரகுமாறன், திரு.K. குமார், திரு.C. நாகராஜன், திரு. M. நடராஜன் திரு. N. மணிவேலன் ஆகியோர்களை கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் ஓய்வு பெறும் காவல் அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்தும், சான்றிதழ் வழங்கியும் கௌரவித்தார்.


 மேலும் அவர் ஓய்வு பெறும் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களை பாராட்டி பேசுகையில் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி ஒய்வு பெறும் நீங்கள் உடல் நலனை நன்றாக பேணிகாத்து குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்..