அலங்காநல்லூர். ஜுன்.01
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கம்மாளப்பட்டி வலசை கிராமத்தில் செல்வ விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை அம்மன், ராகு, கேது உள்ளிட்ட தெய்வங்களுக்கு கடந்த வருடம் கும்பாபிஷே விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று வருசாபிஷேகம் நடந்தது. இதில் கணபதி ஹோமம் சங்கல்பம் கோபூஜை அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.தொடர்ந்து மஞ்சமலை சுவாமி ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து வந்து செல்வ விநாயகர் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபட்டனர். கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஏழு கொத்து மரியாதைக்காரர்கள் இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.