விருதுநகர், ஜூன் 1
இரண்டாம் காமராஜர் என்றும், இளம் காமராஜர் என்றும் யாரையும் கூறமுடியாது. மேலும், காமராஜர் செய்த சாதனைகளை வேறு யாரும் நிகழ்த்தியிருக்க முடியாது என்று, மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வெற்றிலையூரணி கிராமத்தில் பயணிகள் நிழற்குடை மற்றும் கலையரங்கம் ஆகியவற்றை மாணிக்கம்தாகூர் எம்.பி. திறந்துவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கல்வி விருது வழங்கும் விழாவில், தவெக தலைவர் விஜய்யை இளம் காமராஜர் என கூறிய கருத்துக்கு பதில் அளித்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், பெருந்தலைவர் காமராஜர் என்பவர் ஒரே ஒருவர்தான். அவரைப்போல் யாரும் வர முடியாது. இரண்டாம் காமராஜர் மற்றும் இளம் காமராஜர் என யாரையும் கூற முடியாது.
மேலும், காமராஜர் செய்த சாதனைகளை வேறு யாரும் நிகழ்த்தியிருக்க முடியாது. எனவே, மிகைப் படுத்தி பெருந்தலைவருடன் ஒப்பிட்டு யாரையும் பேசுவது என்பது சரியாக இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்,