தஞ்சை,
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஒளிராமன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரசிங்கம். இவருடைய மனைவி மகாலட்சுமி. விவசாயியான இவர் அங்குள்ள பர்மா காலனி என்ற இடத்தில் 2 இடங்களில் கொட்டகை அமைத்து அதில் 7 ஆயிரம் பிராய்லர் கோழிகளை இறைச்சிக்காக வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலையில் இந்த கோழிப்பண்ணையில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது. இதில் கோழிகள் இருந்த 2 கொட்டகைகளும் முற்றிலும் எரிந்து அதில் இருந்த 7 ஆயிரம் பிராய்லர் கோழிகளும் கருகி உயிரிழந்தன.
இந்த தீ விபத்தில் கோழிப்பண்ணையில் இருந்த 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் எரிந்து நாசமானது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கோழிப்பண்ணையில் பற்றி எரிந்த தீயை கட்டுப்படுத்தினர். தீயில் கருகிய கோழிகள் குழி தோண்டி புதைக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.