செய்யாறு ஏப். 24,
திருவண்ணாமலை மாவட்டம் ,செய்யாறு திருவோத்தூர் அருள்மிகு பால குஜாம்பிகை சமேத ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் சமயக்குரவர்கள் நால்வரில் திருநாவுக்கரசருக்கு நேற்று குருபூஜை விழா விமர்சையாக நடைபெற்றது.
திருநாவுக்கரசர் உற்சவ மூர்த்தியாக சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்தார். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கோயில் நிர்வாகமும் விழா குழுவினரும் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.