tamilnadu epaper

தஞ்சாவூரில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்

தஞ்சாவூரில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்

வேளாண் உற்பத்தியை பெருக்கி, உழவர் பெருமக்களின் வருமானத் தினை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடப்பு 2025-26 ஆம் ஆண்டு பயறு வகை கள் சாகுபடி செய்யும் விவசாயி களின் நலனைப் பாதுகாத்திடும் நோக்கத்தில், ஒன்றிய அரசு அறி வித்த குறைந்தபட்ச ஆதரவு விலை யில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்வதற்கு அரசு நட வடிக்கை மேற்கொண்டுள்ளது. நடப்பு 2025-26 ஆம் ஆண்டு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறைக்குட்பட்ட தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தஞ்சா வூர், கும்பகோணம், பாபநாசம், மற்றும் ஒரத்தநாடு ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் மூல மாக உளுந்து 2,550 மெ.டன் மற்றும் பச்சைப் பயறு 60 மெ.டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. உளுந்து மற்றும் பச்சைப் பயறு விளைபொருள்களுக்கு நிர்ணயிக்கப் பட்ட சராசரி தரத்தில் இருக்கும் வண்ணம் நன்கு சுத்தம் செய்து, ஈரப்ப தம் 12%, இதர பொருட்கள் கலப்பு 2%, இதர தானியங்கள் கலப்பு 3%, சேத மடைந்த பயறுகள் 3%, சிறிதளவு சேதமடைந்த பயறுகள் 4%, முதிர்வ டையாத மற்றும் சுருங்கிய பயறுகள் 3%, வண்டுகள் தாக்கிய பயறுகள் 4% இருக்குமாறு நன்கு உலர வைத்து, அயல் பொருட்கள் கலப்பின்றி கொண்டு வர விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு நன்கு உலர வைக்கப் பட்ட தரமான உளுந்து கிலோ ஒன்றிற்கு ரூ.74 வீதத்திலும், பச்சைப்பயறு கிலோ ஒன்றிற்கு ரூ.86.82 என்ற வீதத்திலும் கொள்முதல் செய்யப் படும். விளைபொருள்களுக்கான கிரயத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத் தில் 1.4.2025 முதல் 29.6.2024 வரை 90 நாட்களுக்கு உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்புக் கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் தஞ்சா வூர், கும்பகோணம், பாபநாசம் மற்றும் ஒரத்தநாடு ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களை அணுகி பதிவு செய்து, தங்களது உளுந்து மற்றும் பச்சைப் பயறினை விற்பனை செய்து பயனடையலாம். பயறு வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல லாபகரமான விலை கிடைக்கும் வகையில், தமிழ் நாடு அரசு மேற்கொண்டுள்ள இத் திட்டத்தினை விவசாயப் பெருமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தஞ்சா வூர் விற்பனைக் குழு செயலாளர் மா. சரசு கேட்டுக் கொண்டுள்ளார்.