tamilnadu epaper

தென்னாங்கூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்

தென்னாங்கூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்


வந்தவாசி, ஏப் 12:


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று பங்குனி உத்திரம் திருநாளில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் உற்சவ மூர்த்திகள் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மேலும் வேத மந்திரங்கள் முழங்க அர்ச்சகர் ஸ்வாமிகள் திருக்கல்யாண வைபவத்தை நடத்தினர். பிறகு அரோகரா கோஷத்துடன் மகா தீபாராதனை நடந்தேறியது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக மூல மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தேறியது. பிறகு மைலாப்பூர் ராஜி பாகவதர் குழுவினரின் பஜனை மண்டலி நடைபெற்றது.