நாகர்கோவில், ஜூன் 1
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம், மற்றும் சிறப்பு பூஜை நடந்தது, . பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டத்தை வெள்ளிப் பல்லக்கில் வைத்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம் வந்தது. பின்னர் கொடிமரத்திற்கு விசேஷ பூஜைகள்,சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பூஜையை மணலிக்கரை மாத்தூர் மடம் தந்திரி சஜித் சங்கர நாராயணரூ நடத்தினார். அதனைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு திருக்கொடி ஏற்றப்பட்டது.
இதில் எம். எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இணை ஆணையர் பழனிக்குமார், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ர் ஆனந்த், கன்னியா குமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன்,மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வைகாசி திருவிழாவு’கு தற்போது யானை வரவழைக்கப்பட்டு புனித நீர் மேளதாளத்துடன் எடுத்து வரப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.