விளாத்திகுளம் :
கோவில்பட்டி கல்வி மாவட்ட கண்காணிப்பாளர் திரு. முத்து முனியசாமி அவர்கள் அலுவலகப் பணியில் நாற்பத்து இரண்டு ஆண்டுகள் பணியாற்றி பணி நிறைவு பெற்றதை முன்னிட்டு பாராட்டு விழா நடைபெற்றது.விழாவிற்கு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பாஸ்கரன் அவர்கள் தலைமை ஏற்றார். விளாத்திகுளம் வட்டாரக்கல்வி அலுவலர் ஞானவேல் முன்னிலை வகித்தார். விளாத்திகுளம் ஜெயகுரு மினி மஹாலில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் விளாத்திகுளம் வட்டாரத் தலைவர் மு.க.இப்ராஹிம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ,அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியத் தோழமைகள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். விருசம்பட்டி ஆசிரியர் திருமதி இராஜசங்கரி நன்றி கூறினார்.