வேலூர், ஜூன் 1-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஏரிகுத்தி பகுதியைச் சேர்ந்த ஆர். ஜீவானந்தம், வசந்தா தம்பதியரின் மூத்த மகனும், ஏரிகுத்தி முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஜே. மேகநாதனின் உடன் பிறந்த அண்ணனுமான ஜே. கலையரசன் ஊராட்சி செயலாளராக 26 வருடங்கள் ஏரிகுத்தியிலும், 2 வருடங்களாக எருக்கப்பட்டு ஊராட்சியிலும், 1 வருடமாக பல்லலகுப்பம் ஊராட்சியிலும் பணி செய்த ஊராட்சி செயலாளர் ஜே. கலையரசனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா பேரணாம்பட்டு ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜெ. சித்ரா, ஒன்றியக்குழு துணை தலைவர் டி.லலிதா ஆகியோர் தலைமையிலும், ஒன்றிய ஆணையர் கௌரி, வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத்குமார் முன்னிலையிலும், பல்லலகுப்பத்தில் நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலாளர்கள். மாச்சம்பட்டு சி. மாதவன், ஏ. மணிவண்ணன், எம். வெங்கடேசன், கொத்தபல்லி ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.ரோஜாராஜா, பல்லலகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் என். கஜேந்திரன், எருக்கம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் வி. ராணி வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து கூறினர். கலையரசன் ஏற்புரையாற்றினார்.