tamilnadu epaper

பாஜக மாநிலத் தலைவர் ஆகிறார் நயினார் நாகேந்திரன்! - பின்புலம் என்ன?

பாஜக மாநிலத் தலைவர் ஆகிறார் நயினார்  நாகேந்திரன்! - பின்புலம் என்ன?

சென்னை:

தமிழக பாஜகவின் 13-வது மாநிலத் தலைவர் ஆகிறார் நயினார் நாகேந்திரன். இது குறித்து இன்று (ஏப்.12) அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பாஜக மாநில தலை​வர் தேர்​தலுக்கு விருப்​ப மனு தாக்​கல் (ஏப்.11) நடை​பெற்றது. தமிழக பாஜக​வில் மாநில தலைவர் மற்​றும் தேசிய செயற்​குழு உறுப்​பினர் பதவி​களுக்​கான தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டிருந்தது. அதன்​படி, இவ்​விரு பதவிகளுக்கு போட்​டி​யிடு​பவர்​கள் விருப்​ப மனு தாக்​கல் செய்​ய​லாம் என தமிழக பாஜக தேர்​தல் அதி​காரி எம்​.சக்​கர​வர்த்தி அறி​வித்​திருந்தார். இதற்கான, விருப்பமனுக்களை நேற்று மதி​யம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போட்​டி​யிட விருப்​ப​முள்​ளவர்​கள் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், பாஜக நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு விருப்பமனு அளித்தார். அவரைத் தவிர, மாநிலத் தலைவர் பதவிக்கு வேறு யாரும் விருப்பமனு அளிக்காததால், போட்டியின்றி அப்பதவிக்கு அவர் தேர்வு செய்யப்படுவதாக கட்சியின் தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதையடுத்து, தமிழக பாஜகவின் 13-வது மாநிலத் தலைவர் ஆகிறார் நயினார் நாகேந்தரன். இது குறித்து நாளை (ஏப்.12) அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக, மூன்று பரு​வம் தீவிர உறுப்​பின​ராக​வும் மற்​றும் குறைந்​தது 10 ஆண்​டு​கள் அடிப்​படை உறுப்​பின​ராக​வும் உள்​ளவர் மாநில தலை​வர் பதவிக்கு போட்​டி​யிட தகுதி பெறு​வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆந்திரா, சிக்கிம் போன்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் இந்த விதியை தளர்த்தி, நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைவராக தேர்வு செய்வதாக தேர்தல் அதிகாரி எம்.சக்கரவர்த்தி அறிவித்துள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (ஏப்.12) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது