tamilnadu epaper

புதியதாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த குழந்தைகளுக்கு மிதிவண்டி வழங்கி தலைமையாசிரியர் சிறப்பிப்பு

புதியதாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த குழந்தைகளுக்கு மிதிவண்டி வழங்கி தலைமையாசிரியர் சிறப்பிப்பு

இன்று கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு...


எட்டையபுரம் அருகே உள்ள இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளியில் தமிழகக் கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி 2025-2026 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பேரணி நடைபெற்றது.பள்ளி ஆசிரியர் இந்திரா பேரணியைத் தொடக்கி வைத்தார்.

புதியதாகச் சேர்ந்த அண்ணபூர்ணா மற்றும் யாழினி ஆகிய இரண்டு மாணவியருக்குப் பள்ளியின் தலைமையாசிரியர் மு.க. இப்ராஹிம் தனது சொந்த செலவில் மிதிவண்டிகளை வழங்கி உற்சாகப்படுத்தினார்.இந்நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.