tamilnadu epaper

புதுச்சேரிக்கு புதிய தலைவர் யார்..? - டெல்லிக்குப் படையெடுக்கும் பாஜக தலைகள்!

புதுச்சேரிக்கு புதிய தலைவர் யார்..? - டெல்லிக்குப் படையெடுக்கும் பாஜக தலைகள்!

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரிக்கும் பாஜக மாநில தலைவர் மாற்றம் குறித்த பேச்சு அடிபட ஆரம்பித்திருப்பதால் பலரும் டெல்லிக்கு படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். புதுச்​சேரி மாநில பாஜக தலை​வ​ராக சாமி​நாதன் தொடர்ச்​சி​யாக 8 ஆண்டுகள் பொறுப்​பில் இருந்​தார். இவர் தலை​வ​ராக இருந்த போது​தான் 2021-ல் பாஜக - என்​.ஆர்​.​ காங்​கிரஸ் கூட்​டணி புதுச்​சேரியில் ஆட்​சி​யைப் பிடித்​தது. அந்​தத் தேர்​தலில் 6 இடங்​களில் வென்ற பாஜக, முதல் முறை​யாக அமைச்​சர​வை​யிலும் இடம்​பிடித்தது.


இந்த நிலை​யில், 2023-ல் புதுச்​சேரி மாநில பாஜக தலை​வ​ராக மாநிலங்​களவை உறுப்​பினர் செல்​வகணப​தியை நியமித்​தது பாஜக தலை​மை. இவரது தலை​மை​யில் 2024 மக்​கள​வைத் தேர்​தலை சந்​தித்த பாஜக - என்​.ஆர். காங்​கிரஸ் கூட்​டணி காங்​கிரஸிடம் தோற்​றுப் போனது. ஆளும் கூட்​ட​ணி​யில் இருந்​தும் தொகு​தியை தவற​விட்​டது பாஜக-வுக்கு பெரும் பின்​னடை​வாகக் கருதப்​பட்​டது. இதையடுத்து மாநிலத்​தில் கட்​சி​யின் வளர்ச்​சி​யும் மந்த நிலைக்​குப் போனது.


மக்​கள​வைத் தேர்​தல் தோல்​வியை அடுத்​து, அமைச்​சர், வாரி​யத் தலை​வர் பதவி​களை எதிர்​பார்த்து கிடைக்​காமல் போன பாஜக எம்​எல்​ஏ-க்​கள், பாஜக கூட்​டணி அரசுக்கு எதி​ராக அதிருப்​தி​யைக் காட்​டத் தொடங்​கினர். ஆளுநர் தொடங்கி டெல்லி வரைக்​கும் சென்று புகார்​களை குவித்​தனர்.


பாஜக மாநிலத் தலை​வ​ருக்கு எதி​ராக​வும் போராட்​டங்​களை நடத்​தி​னார்​கள். இப்​படி போராட்​டம் நடத்​திய சிலர் மீது நடவடிக்​கை​யும் எடுத்​தது மாநில பாஜக தலை​மை. இருந்​த​போதும், முன்​னாள் மாநில தலை​வர் இப்​போதைய தலை​வரை வெளிப்​படை​யாகவே விமர்​சித்​தார். அதே​போல், அதிருப்தி பாஜக எம்​எல்​ஏ-க்​கள் அரசுக்கு எதி​ராக​வும் மாநில தலை​மைக்கு எதி​ராக​வும் இன்​றள​வும் பேசி வரு​கி​றார்​கள்.



இப்​படி​யான சூழலில், சட்​டப்​பேர​வைத் தேர்​தலை சமாளிக்க ஏது​வாக பாஜக மாநிலத் தலை​வர் செல்​வகணபதி மாற்​றப்​படலாம் என்ற தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன. அதி​முக கூட்​டணி சுமுக​மாக அமைய வேண்​டும் என்​ப​தற்​காக அண்​ணா​மலை​யையே மாற்​றியது போல், புதுச்​சேரி​யிலும் என்​.ஆர்​.​காங்​கிரஸ் கூட்​ட​ணியை வலுப்​படுத்தி உட்​கட்சி புகைச்​சலை முடிவுக்கு கொண்டு வரும் வித​மாக புதிய தலை​வரை நியமிக்க பாஜக தலைமை முடி​வெடுத்​திருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள். சட்​டப்​பேர​வைத் தலை​வர் செல்​வம், ராமலிங்​கம் உள்​ளிட்​டோரின் பெயர்​கள் மாநில தலை​வர் பதவிக்கு பரிசீலனை​யில் இருப்​ப​தாக​வும் சொல்​கி​றார்​கள்.


அதேசம​யம், மாநில தலை​வரை நியமிப்​ப​தற்கு முன்​பாகவே 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான புதுச்​சேரி மாநில பாஜக தேர்​தல் பொறுப்பாளர்களாக மத்​திய அமைச்​சர் மன்​சுக் எல்​.​மாண்​டவி​யா​வும் இணைப் பொறுப்​பாள​ராக மத்​திய அமைச்​சர் அர்​ஜுன் ராம் மேக்​வாலும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.


இதனிடையே, பாஜக தலை​மை​யின் அழைப்பை ஏற்​று, சட்​டப்​பேர​வைத் தலை​வர் செல்​வம் அண்​மை​யில் டெல்லி சென்று குடியரசு துணைத் தலை​வர், புதுச்​சேரி தேர்​தல் பொறுப்​பாளர்​கள் உள்​ளிட்​டோரை சந்​தித்​துப் பேசி​விட்டு வந்​திருக்​கி​றார். அந்த சமயத்​தில் பாஜக மாநில தலை​வர் செல்​வகணபதி எம்​பி-​யும் டெல்​லி​யில் தேர்​தல் பொறுப்​பாளர்​களைச் சந்​தித்து ஆலோ​சனை நடத்​தி​னார்.


இந்​தநிலை​யில், அடுத்த மாநிலத் தலை​வர் நீங்​கள் தானாமே என்று பேர​வைத் தலை​வர் செல்​வத்​திடம் கேட்​டதற்​கு, “பாஜக தேசிய தலைமை சட்​டப்​பேரவை தலை​வ​ராகவே என்னை தொடரச் சொல்லி இருக்​கிறது. தேசிய தலை​மை​யின் விருப்​பம் என்​னவோ அதன்​படியே நான் நடப்​பேன். தேர்​தல் பொறுப்​பாளர்​கள் எனது நண்​பர்​கள். அதனால் அவர்​களை டெல்லி சென்று மரி​யாதை நிமித்​த​மாக சந்​தித்​து​விட்டு வந்​தேன். 2026 சட்​டப்​பேரவை தேர்​தலிலும் என்​.ஆர்​.​காங்​கிரஸ் - பாஜக கூட்​டணி நீடிக்​கும்” என்றார்.


மாநில தலை​வர் மாற்​றப்​படலாம் என செய்​தி​கள் வரு​கிறதே என பாஜக மாநில தலை​வர் செல்​வகணப​தி​யிடம் கேட்​டதற்​கு, “மாநிலத்​தின் புதிய தலை​வர் நியமனம் குறித்த எந்​தத் தகவலை​யும் கட்​சித் தலைமை எங்​களுக்​குத் தெரிவிக்​க​வில்​லை. புதுச்​சேரி சட்​டப்​பேரவை தேர்​தல் குறித்து மாநில தேர்​தல் பொறுப்​பாளர்களிடம் பேசுவதற்​காக மட்​டுமே நான் டெல்லி சென்று வந்​தேன். மற்​றபடி வேறு ஒன்​றும் ஸ்பெஷலாக இல்​லை” என்று சொன்​னார் அவர்.


தமி​ழ​கத்​தில் மாநிலத் தலை​வரை மாற்​றிய​தால் பாஜக கூட்​ட​ணிக்கு சம்​ம​தித்​து​விட்​டது அதி​முக. ஆனால், புதுச்​சேரி​யில் மாநில தலை​வரை மாற்​றி​னாலும் பாஜக கூட்​ட​ணிக்கு என்​.ஆர்​.​காங்​கிரஸ் தலை​வர் ரங்​க​சாமி ஒத்​து​ வ​ரு​வாரா என்​பது அவர் வணங்​கும் அந்த அப்பா பைத்​தி​யம் சுவாமிக்​குத்​தான் தெரியும்!