tamilnadu epaper

பெண்களை போல சேலை அணிந்து கர்நாட‌காவில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.3 லட்சம் மோசடி

பெண்களை போல சேலை அணிந்து கர்நாட‌காவில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.3 லட்சம் மோசடி

பெங்களூரு:

கர்​நாடக மாநிலம் யாதகிரி மாவட்​டத்​தில் 100 நாள் வேலை திட்​டம் என அழைக்​கப்​படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறு​தித் திட்​டத்​தில் உள்ள குறை​களை தீர்க்க கடந்த மார்ச் மாதத்​தில் மையங்​கள் தொடங்​கப்​பட்​டன. அப்​போது சில பஞ்​சா​யத்​துகளில் ஊதி​யத்​தில் மோசடி அரங்​கேறிய​தாக சிலர் புகைப்பட ஆதா​ரங்​களை அதி​காரி​களிடம் அளித்​தனர். அந்த புகைப்​படங்​களை கண்ட அதி​காரி​கள் அதிர்ச்சி அடைந்​தனர்.


அதாவது, ஏரி​யில் வேலை செய்​யும்​போது பெண்​களை போல சில ஆண்​கள் சேலை அணிந்து தலை​யில் முக்​காடு போட்டு புகைப்​படம் எடுத்​துள்​ளனர். இந்த புகைப்​படங்​களை 100 வேலை திட்​டத்​துக்​கான NMMS எனப்​படும் தேசிய மொபைல் கண்​காணிப்பு சேவை​யில் பதிவேற்​றம் செய்​து, ஊதி​யம் பெற்று வந்​துள்​ளனர். இந்த வகை​யில் ரூ. 3 லட்​சம் வரை மோசடி செய்​தது தற்​போது அம்​பல​மாகி​யுள்​ளது.


இதுகுறித்து பஞ்​சா​யத்து உறுப்​பினர் மல்​லேஷ் கூறுகை​யில், ‘‘சில அதி​காரி​கள் கமிஷனுக்​காக வெளியூர் ஆட்​களை அழைத்​து​வந்து பணி​யில் அமர்த்தி கணக்கு காட்டி ஊதி​யம் பெற்​றுள்​ள‌னர். இந்த மோசடி​யில் ஈடு​பட்ட அதி​காரி​கள் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்க வேண்​டும்'' என்​றார். யாதகிரி மண்டல மேம்​பாட்டு அதி​காரி சென்​னபசவா கூறுகை​யில், ‘‘இந்த விவ​காரத்​தில் எனக்கு எந்​த​வித​மான தொடர்​பும் இல்​லை’’ என்றார்.