மேட்டுப்பாளையம், ஜூன் 1
மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வனப்பகுதியில் தனியாக தவித்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர். பவானி கரையோர பகுதிகளிலும் தாய் யானையை ட்ரோன் கேமரா உதவியுடன் தேடி வருகின்றனர். தொடர்ந்து குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குட்டி யானைக்கு தொடர்ந்து லேக்டோஜென் பால், குளுக்கோஸ், ராகி சாதம், புல், தர்பூசணி பழங்கள் ஆகியவற்றை வழங்கி வருகிறோம். குட்டி புல் வகைகளை விரும்பி சாப்பிடுகிறது. நாளொன்றுக்கு 8 தடவை லேக்டோஜென் பாலுடன் குளுக்கோஸ் புகட்டப்பட்டு வருகிறது. குட்டி யானை முன்பு இருந்தது விட ஆரோக்கியமாக உள்ளது என வன கால்நடை மருத்துவர் சுகுமார் கூறினார்,