கோவை, ஜூன் 1
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக பொது சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள் நோயாளிகள், சிகிச்சைக்கு வரும் வெளிநோயாளிகள், உறவினர்கள் அனைவரும் முககவசம் அணிந்து வர வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.