.
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுமைதாங்கியில் முதலாம் வகுப்பில் புதிதாக சேர்ந்த குழந்தைகளை SMC,PTA முன்னிலையில் மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று மாணவர்களுக்கு பிடித்தமான பரிசு பொருள்கள் வழங்கி வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து அரசின் நலத்திட்டங்கள் ,அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியினை பள்ளியின் தலைமை ஆசிரியர் முனீஸ்வரி ஆசிரியர் நிர்மலாதேவி சிறப்பாக ஏற்பாடு செய்து மாணவர்களை கௌரவித்தனர்.