கமுதி, ஜூன் 1
கமுதி அருகே தர்ம முனீஸ்வரர் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 125 கிடாய்கள் பலியிட்டு பக்தர்களுக்கு அசைவ விருந்து அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டி தர்ம முனீஸ்வரர் கோயில் வருடாந்திர வைகாசி பொங்கல் திருவிழா, கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் மூலவர் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் சார்பில் நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட 1,300 கிலோ அரிசி, 125 கிடாய்களை பலியிட்டு 2,000 கிலோ இறைச்சியை சமைத்து பக்தர்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.