tamilnadu epaper

ரஷ்ய வெளியுறவு அதிகாரிகளுடன் கனிமொழி எம்.பி. கலந்துரையாடல்

ரஷ்ய வெளியுறவு அதிகாரிகளுடன்   கனிமொழி எம்.பி. கலந்துரையாடல்


மாஸ்கோ, மே 24–

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டையும் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் உலகநாடுகளுக்கு விவரிக்க, அனைத்து கட்சி எம்.பி.-களை உள்ளடக்கிய 7 குழுக்களை மத்திய அரசு அறிவித்தது. திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான குழு ரஷ்யா பயணம் மேற்கொண்டனர்.

  ரஷ்ய வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவை சந்தித்து கலந்துரையாடினர். இது குறித்து கனிமொழி எம்.பி., தனது எக்ஸ் பதிவில், “எங்கள் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு, ரஷ்யாவின் சர்வதேச விவகாரங்களுக்கான குழுவின் முதல் துணைத் தலைவர் ஆண்ட்ரி டெனிசோவ் மற்றும் புகழ்பெற்ற செனட்டர்களிடம், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஒன்றுபட்ட மற்றும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துரைத்தோம், பயங்கரவாதம் தொடர்பாக பரஸ்பர அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து நாங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த குழுவினர் லாத்வியா, சிலோவேனியா, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்கின்றனர்.