news Breaking News
clock

அதிமுக தொண்டர்கள் உரிமைக் குழு’ கழகமாக மாற்றம்

அதிமுக தொண்டர்கள் உரிமைக் குழு’ கழகமாக மாற்றம்



சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் டிச.23 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில், அதிமுக தொண்டர்கள் ‘உரிமை மீட்புக்குழு’ என்பதற்கு பதிலாக ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்’ என்று கூறப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் தனது அறிக்கையில், சென்னை வேப்பேரி ரிதர்ட்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மண்டபத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலா ளர்கள் கூட்டம் டிச.23 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை பெற உள்ளது என்று தெரிவித்துள்ளார். கூட்டத்துக்கு, அர சியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரி வித்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News