உடல் உறுப்புகள் திருட்டை முறைகேடு என்பதா? - அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு அண்ணாமலை கண்டனம்

உடல் உறுப்புகள் திருட்டை முறைகேடு என்பதா? - அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னை: ​

நாமக்​கல்லில் நடந்​தது கிட்னி திருட்டு அல்ல, முறை​கேடு என அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கூறியதற்கு தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்​தில் அவர் கூறியிருப்பதாவது: நாமக்​கல் விசைத்​தறி தொழிலா​ளர்​களுக்கு நடந்​தது ‘கிட்னி திருட்டு இல்​லை, முறை​கேடு’ என தமிழக சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் சொல்​கிறார்.


ஒரு​வரின் ஏழ்​மை​யைப் பயன்​படுத்தி அவரின் உடல் உறுப்​பு​களை திருடு​வதை முறை​கேடு என்று சொல்​வ​தா? இந்த விவ​காரத்​தில் இடைத்​தரக​ராக செயல்​பட்ட திமுக நிர்​வாகி திரா​விட ஆனந்​தன் இன்​று​வரை கைது செய்​யப்​ப​டா​மல் இருப்​பது ஏன், கிட்னி திருட்டில் தொடர்​புடைய திமுக​வின் மண்​ணச்​சநல்​லூர் சட்​டப்​பேரவை உறுப்​பினர் நடத்​தும் மருத்​து​வ​மனை மீது ஏதோ கண்துடைப்பு நடவடிக்கை எடுத்​து​விட்​டால் போது​மா? இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.


பழங்குடியினர் வீடுகள்: அண்​ணா​மலை வெளி​யிட்​டுள்ள மற்​றொரு பதி​வில், ‘‘திருப்​பூர் மாவட்​டம், அமராவதி வனச்​சரகத்​துக்கு உட்​பட்ட கோடந்​தூர் திரு​மூர்த்​தி​மலை கிராமத்​தில் காம​ராஜர், எம்ஜிஆர் ஆட்​சிக் காலத்​தில் கட்​டப்​பட்ட வீடு​கள் இன்று வாழவே முடி​யாத நிலைக்கு சிதிலமடைந்​திருப்​ப​தாக அப்​பகு​தியை சேர்ந்த பழங்​குடி​யின மக்​கள் கூறுகின்​றனர்.


வரு​வாய்த்​துறை சார்​பில் ஆய்வு செய்​யப்​பட்டு 110 வீடு​களைப் புதுப்​பித்​துத் தர பழங்​குடி​யினர் நல ஆணை​யம், ஆதி திரா​விடர் நலத் துறைக்​குப் பரிந்​துரைத்​த​தாகச் சொல்​லப்​படும் நிலை​யில் ஒன்​றரை ஆண்டுகளாகி​யும் இது​வரை எந்த நடவடிக்​கையோ, நிதியோ ஒதுக்​கப்​பட​வில்​லை. இது, மலை​வாழ் மக்​களைப் பற்​றிய எந்த அக்​கறை​யும் திமுக அரசுக்கு இல்லை என்​ப​தையே காட்டுகிறது.


எளிய மக்​களுக்​கான பிரதமரின் வீடு​கட்​டும் திட்​டம், ஜல் ஜீவன், பிரதமரின் கிராமப்​புற சாலைகள் திட்​டம் எனப் பல திட்​டங்​கள் மூலம் பெறப்​படும் நிதி​கள் எங்​கு​தான்​ செல்​கின்​றன?’ இவ்வாறு குறிப்​பிட்​டுள்​ளார்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%