குடிபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நூதன தண்டனை: 1,000 துண்டுப் பிரசுரம் வழங்க உத்தரவு

குடிபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நூதன தண்டனை: 1,000 துண்டுப் பிரசுரம் வழங்க உத்தரவு



புனே: குடிபோதை​யில் வாக​னம் ஓட்​டிய இளைஞருக்கு 1,000 துண்​டுப் பிரசுரங்​களை வழங்​கு​மாறு புனே மோட்​டார் வாகன நீதிமன்றம் உத்​தர​விட்​டுள்​ளது. மகா​ராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி சின்ச்​வாட்​டின் ஹின்​ஜா​வாடி பகு​தி​யில் கடந்த ஜூலை 22-ம் தேதி 28 வயது இளைஞர் ஒரு​வர் மது​போதை​யில் வாக​னம் ஓட்டி வந்து போலீ​ஸாரிடம் சிக்​கிக்​கொண்​டார்.


இதையடுத்து அவர் மீது மோட்​டார் வாகன சட்​டம் தொடர்​புடைய பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. அவருக்​கு, புனே மோட்​டார் வாகன நீதி​மன்​றம் ரூ.10,000 அபராதம் விதித்​தது.


அத்​துடன் குடிபோதை​யில் வாக​னம் ஓட்​டு​வ​தால் ஏற்​படும் ஆபத்​துகள் குறித்து 1,000 துண்​டுப் பிரசுரங்​களை அச்​சிட்டு போக்​கு​வரத்து சிக்​னல்​களில் வாகன ஓட்​டுநர்​களுக்கு விநியோகிக்க வேண்​டும் என்று உத்​தர​விட்​ட​தாக பிம்ப்ரி சின்ச்​வாட் போக்​கு​வரத்து பிரிவு காவல் துறை அதி​காரி ஒரு​வர் தெரி​வித்​துள்​ளார்.


நடப்​பாண்டு ஜனவரி முதல் செப்​டம்​பர் வரையி​லான ஒன்​பது மாதங்​களில் குடிபோதை​யில் வாக​னம் இயக்​கிய​தாக 2,984 வழக்​கு​களை பிம்ப்ரி சின்ச்​வாட் காவல் துறை​யினர் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%