தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்: நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை

தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்: நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை



சிவகாசி: சிவ​காசி பட்​டாசு உற்​பத்​தி​யாளர்​கள் மற்​றும் மொத்த வியா​பாரி​களிடம் இருந்த பட்​டாசுகள் அனைத்​தும் விற்​றுத் தீர்ந்த நிலை​யில், நடப்​பாண்டு தீபாவளி பண்​டிகைக்கு நாடு முழு​வதும் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்​டாசு வர்த்​தகம் நடை​பெற்​ற​தாக சிவ​காசி உற்​பத்​தி​யாளர்​கள் தெரி​வித்​தனர்.


சிவ​காசி பகு​தி​யில் கடந்த ஆண்டு தீபாவளி பட்​டாசு விற்​பனை அமோக​மாக நடை​பெற்​ற​தால், உற்​பத்​தி​யாளர்​கள், மொத்த வியா​பாரி​கள் மற்​றும் சில்​லறை வியா​பாரி​களிடம் இருந்த பட்​டாசுகள் அனைத்​தும் விற்​றுத் தீர்ந்​தன. இதனால், கடந்த டிசம்​பர் மாதமே பட்​டாசு ஆலைகளில் உற்​பத்தி தொடங்​கியது.


தொடர் வெடி விபத்​து, தற்​காலிக​மாக தடை செய்​யப்​பட்ட பட்​டாசு ஆலைகளில் உற்​பத்​திக்கு அனு​மதி வழங்​கு​வ​தில் ஏற்​பட்ட தாமதம், அதி​காரி​கள் ஆய்​வு, சிறு பட்​டாசு ஆலைகள் வேலைநிறுத்​தம் உள்​ளிட்ட காரணங்​களால் பட்​டாசு உற்​பத்தி 30 சதவீதம் வரை குறைந்​தது.


ஆடிப்​பெருக்கு அன்று சிறப்பு பூஜை செய்​யப்​பட்​டு, தீபாவளி பண்​டிகைக்கு மொத்த விற்​பனை தொடங்​கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்​டிகைக்கு 20 வகை​யான புதிய ரக பட்​டாசுகள் அறி​முகப்​படுத்​தப்​பட்​டு, 300 வகை​யான பட்​டாசுகள் விற்​பனைக்கு வந்​தன. உற்​பத்தி குறை​வால் தட்​டுப்​பாடு ஏற்​பட்டு பேன்ஸி ரக பட்​டாசுகளுக்கு 20 சதவீதத்​துக்​கும் மேல் விலை உயர்ந்​தது. உற்​பத்​தி​யாளர்​கள் மற்​றும் மொத்த விற்​பனை​யாளர்​களிடம் இருந்த பட்​டாசுகள் அனைத்​தும் விற்​பனை​யாகின.


கடந்த ஒரு வார​மாக தமிழகத்​தில் பெய்து வரும் தொடர்​மழை காரண​மாக சில்​லறை விற்​பனை பாதிக்​கப்​பட்​டது. உற்​பத்தி குறைந்​தா​லும், விலை உயர்வு மற்​றும் டெல்​லி​யில் பட்​டாசு வெடிக்க அனு​மதி வழங்​கியதன் காரண​மாக கடந்த ஆண்​டைப்​போல இந்த ஆண்​டும் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்​டாசு வர்த்​தகம் நடை​பெற்​ற​தாக உற்​பத்​தி​யாளர்​கள் தெரி​வித்​தனர்.


தமிழ்​நாடு பட்​டாசு மற்​றும் கேப் வெடி உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கத் (டான்​பா​மா) தலை​வர் கணேசன் கூறும்​போது, “டெல்​லி​யில் பட்​டாசு வெடிக்க அனு​மதி வழங்​கிய​தால், வட மாநிலங்​களில் பட்​டாசு விற்​பனை சிறப்​பாக நடை​பெற்​றது. கடந்த ஆண்​டைப்​போல இந்த ஆண்​டும் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்​டாசு வர்த்​தகம் நடைபெற்​றது” என்​றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%