மதுரையில் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: இந்திய அணி ஆட்டத்தை காண முடியாத உள்ளூர் மக்கள் ஆதங்கம்

மதுரையில் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: இந்திய அணி ஆட்டத்தை காண முடியாத உள்ளூர் மக்கள் ஆதங்கம்


 

மதுரை: ஜூனியர் உலக கோப்பை ஹாக்கியில் மதுரையில் நேற்று முன்தினம் நடந்த இந்தியா-சுவிட்சர்லாந்து அணிகள் இடையேயான போட்டியை பார்க்க முடியாமல் உள்ளூர் ரசிகர்கள் பரிதவித்தனர். முன்கூட்டியே வழங்கப்பட்ட பாஸ், டிக்கெட்டு களால் விஐபிகளின் குடும்பத்தினர் மட்டும் அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்தனர்.


ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள், கடந்த நவ. 28-ல் தொடங்கி மதுரை, சென்னையில் நடந்து வருகிறது. டிசம்பர் 10 வரை நடைபெற உள்ளது. மதுரையில் ரேஸ் கோர்ஸ் பகுதியிலுள்ள எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் புதிதாக அமைக்கப்பட்ட சர்வதேச ஹாக்கி மைதானத்தில் இப்போட்டிகள் நடக்கின்றன.


உலகக்கோப்பை போட்டிகளுக் காக மதுரையில் புதிதாக சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டதை பெருமையாக உள்ளூர் மக்கள் நினைத்தனர். சர்வதேச ஹாக்கி போட்டிகளை இனி மதுரையிலேயே நேரில் கண்டுகளிக்கலாம் என பேராவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.


ரேஸ் கோர்ஸ் விளையாட்டு அரங்கில் நடக்கும் ஹாக்கி போட்டிகளை நேரில் பார்க்க, தனியார் மொபைல் செயலியில் இலவசமாக முன்பதிவு செய்யும் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுகளை கொண்டு வருவோர், 6-வது நுழைவு வாயில் வழியாக அரங்கினுள் அனுமதிக்கப்படுகின்றனர்.


5-வது நுழைவுவாயில் செய்தியாளர்களும், 4, 3-வது நுழைவு வாயில்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் சர்வதேச ஹாக்கி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.


ஆனால், மொபைல் செயலியில் முன்பதிவு செய்ய முயன்றால் பெரும்பாலும் டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டதாகவே தகவல் வருகிறது. இதனால், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் பெரும் முயற்சி செய்தும், இந்த செயலில் டிக்கெட்டுகளை பெற முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%