லட்சுமி தேவியின் வடிவங்கள்

லட்சுமி தேவியின் வடிவங்கள்



சிவசக்தி 

நாப்பிராம்பட்டி

ஊத்தங்கரை 

கிருஷ்ணகிரி மாவட்டம்



🌹லட்சுமியின் வடிவங்களாக அஷ்ட லட்சுமி எனும் எட்டு வடிவங்களும்,16 வடிவங்களும் சமய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.


 *அஷ்ட லட்சுமிகள்* 

செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படும் லட்சுமியின் வடிவமானது ஆதிலட்சுமி,

தான்யலட்சுமி,

தைரியலட்சுமி,

கஜலட்சுமி,

சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி,

தனலட்சுமி என எட்டு வடிவங்களாக காணப்படுகிறது.


 *16 வடிவங்கள்* 

🍃தனலட்சுமி,

🍃வித்யாலட்சுமி,

🍃தான்யலட்சுமி,

🍃வரலட்சுமி,

🍃சவுபாக்யலட்சுமி,

🍃சந்தானலட்சுமி,

🍃காருண்யலட்சுமி,

🍃மகாலட்சுமி,

🍃சக்திலட்சுமி,

🍃சாந்திலட்சுமி,

🍃சாயாலட்சுமி,

🍃த்ருஷ்ணாலட்சுமி,

🍃சாந்தலட்சுமி,

🍃கிருத்திலட்சுமி,

🍃விஜயலட்சுமி,

🍃ஆரோக்கிய லட்சுமி என லட்சுமிகள் 16 வகை வடிவங்களாக காணப்பட்டது.

 *ஆதிலட்சுமி* 

மகாலட்சுமி,பிருகு முனிவரின் மகளாக அவதரித்தவள். திருமகளின் மிகப்பழைமையான தோற்றம்.இந்த லட்சுமியை ரமா லட்சுமி என்றும் அழைக்கின்றார்கள். தாமரை,வெண்கொடி,அஞ்சல்,அருளல் தாங்கும் நாற்கரங்கள் கொண்ட அன்னை.

 *தனலட்சுமி* 

பொன்,பணம் என்பவற்றை அருளும் அன்னை.சக்கரம், சங்கு,கலசம், வில்லம்பு,தாமரை,அஞ்சேல் என்பவற்றைத் தாங்கும் ஆறுகரம் கொண்டவள்.

 *தானியலட்சுமி* 

வேளாண்மை வளம் பெருக்கும் தேவி.பசுந்துகில் தரித்து,நெற்கதிர்,கரும்பு,வாழை, தாமரைகள்,கதை,அஞ்சேல்,அருளல் தரித்த எண்கரம் கொண்டருளும் தாயார்.

 *கஜலட்சுமி* 

கால் நடைகள் மூலம் வளம் அருள்பவள்.இவளே அரசராக்கும் பெருஞ் செல்வங்கள் தருபவள்.பாற்கடலிலிருந்து உதித்தவளும் இவளே!

இருயானைகள் நீராட்ட,அஞ்சேல், அருளல்,தாமரைகள் தாங்கியவளாக செந்துகில் உடுத்து அருளுவாள்.

 *சந்தான லட்சுமி* 

குழந்தைப் பேறு அருளும் திருமகள்.கலசங்கள்,கத்தி,கேடயம்,அஞ்சேல் தரித்த அறுகரத்தவள்.மடியில் குழந்தையொன்று அமர்ந்திருக்க அருள்புரிவாள்.

 *வீரலட்சுமி* 

வீரம்,வலிமை, அருளுவாள்.துன்பகரமான தருணங்களில் வாழ்க்கையில் துணிவைத் தரும் தாயார்.செவ்வாடை தரித்தவள்.சங்கு,சக்கர,வில்,அம்பு,கத்தி,ஓலைச்சுவடி,அஞ்சேல்,அருளல் என்பவற்றைத் தாங்கிய எண்கரத்தினள்.

 *விஜயலட்சுமி* 

யுத்தங்களில் மாத்திரமன்றி,எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி பெற அருளுவாள்.சங்கு,சக்கரம்,பாசம், கத்தி,கேடயம், தாமரை,அஞ்சேல்,அருளல் என எட்டுக்கரங்களுடன் காட்சியளிப்பவள்.

 *வித்யாலட்சுமி* 

அறிவையும் கலைகளில் வல்லமயும் தருபவள்.வெண்துகிலுடுத்து,அஞ்சேல்,அபயம்,தாமரைகள் ஏந்திய நாற்கரத்தினள்.

======================

வேறு சில வடிவங்கள்

☆செழிப்பை நல்கும் வளத்திரு ஐசுவரியலட்சுமி.

☆நன்மைகள் யாவும் தரும் நற்றிரு சௌபாக்கியலட்சுமி.

☆அரசபோகங்களை அருளும் நகர்த்திரு ராஜியலட்சுமி,மற்றும் வரம் தரும் வரலட்சுமி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%