
ஏ.எஸ். கோவிந்தராஜன் எழுதிய "பழமொழியும் அதன் உண்மை விளக்கமும்" படித்ததும் ஹலோ FM - ல் ஆத்திச்சூடி நிகழ்ச்சியில் " கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என்பதற்கு கழு என்கிற ஒரு வகை புல்லில் தைக்கும் பாயில் கற்பூர வாசனை தெரியும் அதான் " கழு தைக்கத் தெரியுமாம் கற்பூர வாசனை" எனச் சொன்னது நினைவிற்கு வந்தது.
கயப்பாக்கம் ரமேஷ் எழுதிய " முடிவுகள்" படித்ததும் தேங்காய் சீனிவாசன் " கேக்கறதுக்கு நாலுபேர் வேண்டாம், தூக்கறதுக்கு நாலுபேர் இருந்தால்" போதும் எனப் பேசிய வசனம் ஞாபகத்துக்கு வந்தது.
தாரா மதன் எழுதிய " அப்பத்தா...அப்பத்தா" ல மாலதி சுமதி பற்றி சந்தேகப்படுவது, முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜ்- தீபா இடையேயான உறவை ஊர்வசி சந்கேகப்படுவதை நினைவூட்டியது.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?