DSP சிராஜை பாராட்டிய தெலுங்கானா காவல்துறை

DSP சிராஜை பாராட்டிய தெலுங்கானா காவல்துறை

ஓவல்:


இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த பரபரப்பான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. முதல் டெஸ்டில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது டெஸ்டில் 22 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4-வது டெஸ்ட் டிரா ஆனது.


ஓவல் டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு முகமது சிராஜ் முக்கிய பங்கு வகித்தார். அவர் 5 விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட் கைப்பற்றினார். இந்த டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருது அவருக்கு கிடைத்தது.


சிராஜ் கூறும்போது, "தான் வீசிய ஒவ்வொரு பந்தும் நாட்டுக்கானது. எனக்கானது அல்ல" என்று குறிப்பிட்டார்.


இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சிராஜை தெலங்கானா காவல்துறை பாராட்டி போஸ்டர் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%