tamilnadu epaper

கடல் போலல்ல கரை

கடல் போலல்ல கரை


எரிமலையை அவிக்க

சிறுதூறலைப் பொழிந்துவிட்டு


யுகாந்திரமாய்க் களைத்திருக்கையில்

நாழிகை இளைப்பாறச் சொல்லி

அடுத்த யாத்திரைக்குத்

துரிதப்படுத்திவிட்டு


பற்றவைத்த ஒற்றைத் தீக்குச்சியை

இருட்குகையின் நெடுவழியில்

கை தந்துவிட்டு


வந்துவிடுவாய்தானே என்ற

விடை எதிர்பாராக் கேள்வியுடன்

கணத்தில் விரைந்து போயிருந்தாய்


ஒரு கடல் மற்றொரு கடலுக்குள்

பொருந்திவிடுவதைபோல

அதே பெயரில் ஊர்

அதே பெயரில் வீதி

அதே இலக்கத்தில் கதவு


ஒரு கரை பிறிதொரு கரைக்குள்

பொருந்துவதில்லை என்பதாய்

வேறெவரும்

நீயாகிவிடமாட்டார் தானே. 



-கீர்த்தி