கரிசக்காட்டுப் பூவே -என்
கனவே நீ தானடி !
உன் வெட்கம் காணத் தானடி -என்
குழந்தை மனசு ஏங்குதடி !
மயில் போல கால் ரெண்டும்
மழை பெய்யாமலே
அழகாய் தான் ஆடுதடி!
நீ சீலை கட்டும் அழகை பார்க்கத்தான்
வானவில் வானில் தோன்றுதடி !
மிளிரும் உன் மூக்குத்திக்காகத் தானடி
வானில் நிலவும் தோன்றுமடி
உன் காதில் குலுங்கும் ஜிமிக்கி
கும்கியாய் வந்து என் உயிரை கொல்லுதடி.
சிரித்தால் அழகு
சிணுங்கினால் அழகு
முறைத்தால் அழகு -நீ
முறைப்பெண்ணாக வந்தால் அழகிலும் அழகு !
என்னவளே என்ன சொல்லுவேன்
எப்படி சொல்வேன் ?
நீ தான் என் பொண்டாட்டியாக வர வேண்டுமென்று !
-லி.நௌஷாத் கான்