கொட்டுது கொட்டுது
கோடை மழை
வீசி அடிக்குது
காற்று மழை
இடியும் மின்னலும்
கூடும் மழை
இதமாய் வெப்பம்
குறைக்கும் மழை.
வறண்ட நிலத்தில்
வீழும் மழை
வாசல் தெருவில்
ஊறும் மழை.
உழவு செய்ய
உதவும் மழை
உழைக்கும் மனிதர்
விரும்பும் மழை
ஏரி குளம்
நிரம்பும் மழை
எங்கள் பூமி
செழிக்கும் மழை
எங்கும் மழைநீர்
தேக்கிடுவோம்
எல்லா உயிர்க்கும்
உதவிடுவோம்.
கூத்தப்பாடி மா . கோவிந்தசாமி