காற்றின்றி
குழலில்
கானம் எழாது
துடுப்பின்றி
ஆற்றில்
படகு ஓடாது!
விதையின்றி
விருட்சங்கள்
விளையாது !
சிரிப்பின்றி
முகம்
மலர்ச்சியுறாது!
போட்டியின்றி
வணிகம்
செழிக்காது!
மேகமின்றி
மழையும்
பொழியாது!
மின்னலின்றி
இடியும்…
இடிக்காது!
எல்லாவற்றுக்கும்
ஏதாவது ஒரு
துணை வேண்டும்
நான் யார் என்றே
அறிந்திட
”நான்” தேவையில்லை....
கவிஞர் பாலசந்தர்
மண்ணச்சநல்லூர்