சென்னை, மே 27–
பவன் கல்யாண் புதிய எம்.ஜி.ஆர். என்று நயினார்நாகேந்திரன் கூறினார்.
சென்னை திருவான்மியூரில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கம் நேற்று நடந்தது. தமிழ்நாடு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கலந்து கொண்டனர். இதில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
ஆந்திராவில் என்.டி.ஆர் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். அவர்கள் இருவருக்கும் நிறைய தொடர்பு உண்டு. அதே போல் புதிய எம்.ஜி.ஆராக இருக்கும் பவன் கல்யாண் இன்றைக்கு நம்முடன் பவனி வந்திருக்கிறார். அவருடைய வரவு நல்வரவாக வேண்டும். அவர் வந்திருப்பதை தேச ஒற்றுமை நாளாக நினைக்கிறேன். ஒரே நாடு ஒரே தேசம் 1960 வரையில் ஒரே தேர்தலாக இருந்தது. கடந்த 2024 மக்களவை தேர்தலில் 1 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறோம். ஒரே தேர்தலாக இருந்தால் நிச்சயம் அதில் 12 ஆயிரம் கோடி ரூபாய் மிஞ்சும்.
எனவே ஒரே நாடு ஒரே தேர்தலால் நமக்கு இவ்வளவு நன்மை கிடைக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நேரம் மிச்சமாகிறது. இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒற்றை கட்சியின் ஆட்சிக்கு வழிவகுக்கும் என்கிறார். ஆனால் அவரது தந்தை ஆதரித்திருக்கிறார்”
இவ்வாறு அவர் பேசினார்.