திருவண்ணாமலை மே 22 திருவண்ணாமலையில் ரூ 10 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட தோழி விடுதியை மாண்புமிகு சட்டமன்ற துணை சபாநாயகர் திரு.கு.பிச்சாண்டி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு தர்ப்பகராஜ் அவர்கள், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. C. N. அண்ணாதுரை எம்.பி அவர்கள் மகளிர் திட்ட இயக்குனர் சரண்யா தேவி அவர்கள், மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி மற்றும் அரசுத்துறையை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.