tamilnadu epaper

மனதோடு மழைக்காலம்

மனதோடு மழைக்காலம்

மறையும் மேகங்கள் எல்லாம் கருமையாகியிட
மயிலும் அதற்கேற்றாற்போல் நடனமாடிட
மனிதர்களின் சப்தம் செவியில் விழுந்திட
மண்வாசனை நாசியில் நுழைந்து சென்றிட
மழைச்சாரலும் சன்னலோடு வந்து பேசிட
மண்ணில் விழுந்து முதல் தூறல் 
மண்ணோடு பேசிக்கொண்டு மனதோடு உறவாடின
மழையினை இரசித்து உள்ளம் குளிர்கிறது
மழை பெய்திட தனிமை அழகானது
மனதோடு ஒட்டிக்கொண்டது போல 
மனதோடு மழைக்காலம் மனதிற்குள் சுகமாய்
மழைவிட்ட பிறகும் மறையாத தூவானம்
மனதை பறித்து செல்கிறது மழைக்காலம்

.....
செ.முருகேசன்
இராசிபுரம்