tamilnadu epaper

ரூ. 4 கோடி தந்தால் அமைச்சர் பதவி' அமித்ஷா மகன் பெயரில் மோசடி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய 3 பேர் கைது

ரூ. 4 கோடி தந்தால் அமைச்சர் பதவி'  அமித்ஷா மகன் பெயரில் மோசடி  எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய 3 பேர் கைது


புதுடெல்லி, மார்ச் 12 – 

மத்தியஅமைச்சர் அமித்ஷா மகன் பெயரில் மோசடிநடந்துள்ளது. ரூ. 4 கோடி தந்தால், அமைச்சர் பதவி வாங்கித் தருவோம் என்று கூறி பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மணிப்பூரில் முதல்வராக இருந்த பிரேன் சிங் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கு பாஜ புதிய அரசு அமைக்கவில்லை. ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. இதைப் பயன்படுத்தி 3 மோசடிப் பேர்வழிகள், மணிப்பூர் சட்டசபை சபாநாயகர் தோக்சோம் சத்யபிரதா சிங் உள்ளிட்ட எம்எல்ஏக்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். ரூ.4 கோடி கொடுத்தால் அமைச்சர் பதவியை பெற்றுத்தருகிறேன் என்று ஜெய்ஷா பெயரால் கூறி உள்ளனர்.

இதுகுறித்து மணிப்பூர் சபாநாயகர், எம்எல்ஏக்கள் முறைப்படி போலீசில் புகார் செய்ய, போலீசார் பிஎன்எஸ் பிரிவுகள் 318 (4), 319 (2)ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கினர்.

அதைத் தொடர்ந்து 3 மோசடிப் பேர்வழிகள் டெல்லியில் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் டெல்லி இருந்து விமானம் மூலம் இம்பாலுக்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது.