tamilnadu epaper

அட்சய திருதியை பாண்டுரங்கனுக்கு ஸ்வர்ண அபிஷேகம்

அட்சய திருதியை பாண்டுரங்கனுக்கு ஸ்வர்ண அபிஷேகம்


வந்தவாசி, மே 02:

 திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு மூல மூர்த்திகளுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. மேலும் ஸ்வர்ண அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை நடந்தேறியது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.