tamilnadu epaper

அனுமன் கொள்கைப்படி பாக். மீது இந்தியா தாக்குதல் ராஜ்நாத்சிங் பெருமிதம்

அனுமன் கொள்கைப்படி  பாக். மீது இந்தியா தாக்குதல்  ராஜ்நாத்சிங் பெருமிதம்


புதுடெல்லி, மே 8

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில், கடந்த மாதம் பாக். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிந்தனர். இதற்கு பதிலடியாக நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது, இந்தியப் படைகள் சுமார் 01.05 மணி முதல் 01.30 மணிவரை, சுமார் 25 நிமிட தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 26 பேர் கொல்லப்பட்டதாகவும் , 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

 இதுகுறித்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாவது: 

 நமது இந்திய பாதுகாப்பு படைகள் வீரத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்தி, ஒரு புதிய வரலாற்றைப் படைத்தன. இந்திய ஆயுதப்படைகள் துல்லியத்தன்மை, விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் ஆகியவற்றுடன் செயல்பட்டன. சரியான நேரத்தில் துல்லியமாக அழிக்கப்படவேண்டிய இலக்குகளை நாங்கள் தீர்மானித்தோம்.

 பயங்கரவாதிகள் மீதான தாக்குதலின்போது, பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதிலும் நமது ஆயுதப்படைகள் திறம்பட செயல்பட்டன. அசோக வனத்திற்குள் செல்லும்போது, அனுமன் பின்பற்றிய கொள்கையை நாங்கள் பின்பற்றினோம். எங்கள் அப்பாவிகளைக் கொன்றவர்களை மட்டுமே நாங்கள் குறிவைத்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.