tamilnadu epaper

அவள்

அவள்


நம் சந்திப்புகளில்

தேய்ந்தன நாட்கள்.

நான் இப்போது 

போன மாதத்தில் 

இருக்கிறேன்.


கிடைக்காத போதும் 

உந்தன் முத்தம் 

நினைக்க இனிமையாக…

அணைக்காத போதும் 

உந்தன் அன்பு 

வந்துவிழுகிறது மடியில்… 


சிற்பங்கள் உன்னிடம்

வடிவம் கற்றன.

ஓவியங்கள் உன்னிடம் 

வளைவைப் பயின்றன.



-கே. பி. ஜனார்த்தனன்