அறுவடை ஆனதும் அம்மண் உலர
நறுமணம் வந்திடும் நாசி
துளைக்கும்
கொழுகலப் பையினால்
குத்தி உழவே
புழுக்கள் வயலில் புரளுமே நன்றாய்
வளியின் அசைவும் வழியாய் அமையும்
துளியும் இறங்கி
துளையில் நுழைந்திடும்
வேப்பங் குழையது வெட்டியே வைத்திட
ஆப்பென நோயை அழித்து விளைக்கும்
செயற்கை உழவினால்
சீர்கேடாம் சிந்தி
இயற்கை உழவினையே ஏல்
-சிவ.சே.முத்துவிநாயகம்