tamilnadu epaper

உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் மகா ஆரத்தி தரிசனம்:

உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் மகா ஆரத்தி தரிசனம்:


செய்யாறு மே .22,


செய்யார் அடுத்த உக்கல் அருள்மிகு மடாவளம் காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று மகா ஆரத்தி தரிசன நிகழ்வு நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த கூழமந்தல் அருகில் உள்ளது உக்கல் கிராமம். இங்கு அருள்மிகு காமாட்சி அம்பாள் எழுந்தருளியுள்ளார். நேற்று புதன்கிழமை முன்னிட்டு மூலவரான அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.



முன்னதாக வேள்வி பூஜையை ஆலய குரு சங்கர் குருஜி நடத்தினார். அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் அருள் பாலித்தார்.


கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது .திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.