ராமநாதபுரம், ஏப். 26–
-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணியர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து, தமிழகத்தில் 14 கடலோர மாவட்டங்களில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை, 1076 கி.மீ., கடற்கரை பகுதியில் சஜாக் ஆபரேஷன் நேற்று காலை, 7 மணி முதல் இரவு, 7 மணி வரை நடந்தது.
கடற்படை, கடலோர காவல்படை, மரைன் போலீசார், உள்ளூர் போலீசார் இணைந்து இந்த ஒத்திகையில் ஈடுபட்டனர். போலீசார் பயங்கரவாதிகள் போல் வேடமிட்டு கடற்கரை பகுதியில் ஊடுருவல் செய்வதையும், அவர்களை தடுத்து நிறுத்துவதும் நடந்தது. கடலோர காவல் படையின் ஹோவர் கிராப்ட், கடற்படையின் ரோந்து கப்பல்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டன.