காங்கோ ஜனநாயகக் குடியரசில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் மேலும் தீவிர நிலைக்கு சென்றுள்ளது. போரை நிறுத்துவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ருவாண்டா ஆதரவு எம்23 படைகளால் நிராகரிக்கப்பட்டது. இப்படை காங்கோவின் கோமா, புகாவு, கிவுஸ், உவிரா, கமன்யோலா என பல நகரங்களை கைப்பற்றி யுள்ளது. குறிப்பாக கனிமவளங்கள் நிறைந்த 1,24,000 கிமீ பகுதிகளை இப்படை கைப்பற்றி யுள்ளது. இப்போரால் ஒட்டுமொத்த நாட்டின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.